Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

ஆதவன் பக்கம் (59) – செல்வேந்திரா சரியான தெரிவா?

பிரசுரிக்கபட்ட திகதி: 23/09/2021 (வியாழக்கிழமை)

கடந்த 2 வாரங்கள் முறை இடம்பெற்ற வல்வை நகரசபைத் தலைவர் தெரிவுக்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் பகிஷ்கரிக்க……… மீண்டும் பகிஷ்கரித்தால் நகரசபை கலைக்கப்படலாம் என்றிருந்த நிலையில்– நேற்று மீண்டும் தவிசாளர் தேர்வுக்கு அழைப்பு. 

கூட்டமைப்பு உறுப்பினர்களும் கலந்து கொள்ள – தமிழ் படங்களில் இறுதியில் வரும் கிளைமாக்ஸ் போல, கூட்டமைப்பு உறுப்பினர் ஞானேந்திரன் எதிர்த்து உயரம் பாய, திரு. செல்வேந்திரா – அவரே எதிர்பாராத வகையில் - வெற்றி பெற்றுவிட்டார். 
 
திரைமறைவில் நடந்தது என்று சொல்லப்படுவது இதுதான்.
 
திரு கருணாநந்தராசாவின் மறவைத் தொடர்ந்து ரெலோவில் (கூட்டமைப்பில்) யாரைத் தெரிவு செய்வது என்னும் இழுபறி இருந்து வந்தது. 
 
ரெலோவில் இருந்து வெளியேறி புதிய கட்சியை திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் தொடங்கியிருந்தாலும், ரெலோவின் வல்வை நகரசபை உறுப்பினர்கள் விடயத்தில் அவரின் செல்வாக்குத்தான் தொடர்ந்து கொண்டு வந்தது.  
 
இந்த வேளையில் ரெலோ முக்கியஸ்தர்கள் திரு. செல்வம் அடைக்கலநாதன் மற்றும் திரு. ஜனா ஆகியோர் மற்றும் அவர்களின் வல்வை நகரசபை உறுப்பினர்களுக்கு இடையே - யாரை அடுத்த தவிசாளாராக நியமிப்பது  என்ற கூட்டம். 
 
ஏகமனதான முடிவு எட்டப்படாமல் திரு.சிவா, திரு.சதீஷ் மற்றும் திரு ஞானேந்திரன் ஆகியோர் தவிசாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்க – வாக்கெடுப்பு. 
 
சிவா, சதீஷ் ஆகியோருக்கு தலா 3 வாக்குகள். இதனால் ஞானேந்திரன் 0 ஆனதால் அதிருப்தி. 
 
இங்கு நான் சுட்டிக்காட்ட வரும் விடயம் – சதீஷ் மற்றும் ஞானேந்திரன் ஆகியோர் நகரசபைத் தலைவர் தெரிவின் ஓட்டத்தில் இடம்பெற்றமைதான்.
 
இதுவரை வல்வை நகரசபைத் தலைவராக இருந்தவர்கள் வல்வை நகரப் பகுதியை சேர்ந்தவர்கள் மட்டும் தான். 
 
சதீஷ் வல்வையின் புறநில கிராமமான கொம்மந்தறையையும்,  ஞானேந்திரன் வல்வெட்டியையும் சேர்ந்தவர். 
 
நகரசபை, கிராமசபை மற்றும் பிரதேச சபைகள் எல்லாம் பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டவைதான்.  “அடிபட்டுக் கொண்டே இருங்கோ” என்று அமைத்து வைத்து விட்டார்கள். நகரசபை அடிபாடுகள் இங்கு மட்டுமல்ல சிங்களப்பகுதிகளிலும் தான். 
 
நான் பார்த்த அசுர வளர்ச்சி அடையும் நாடுகளில் இது போன்ற சபைகள் எல்லாம் இல்லை. (பிரிட்டனை, கனடாவை  நான் சொல்ல வரவில்லை).
 
தலைவர் வல்வெட்டித்துறை தாண்டி பண்டிதரையும், சங்கரையும் தளபதிகளாக ஆக்கியதை பெருமைபட்டுக் கூறிக்கொள்ளும் எம்மவர்கள், வல்வெட்டித்துறை நகரசபை தலைவராக மட்டும் பண்டிதரின் சுற்றத்தாரோ  அல்லது சங்கரின் சுற்றத்தாரோ வருவதை விரும்பாமல் விடுவது என்னால் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒன்று. இதுபற்றி கூடுதலாக ‘வொரி’ பண்ணுவது புலம் பெயர்ந்து, புலம் பெயர்ந்த நாட்டில் பல்வேறு பதவிகளை பிடித்து அல்லது பிடிக்க வைத்து உள்ள நம்மவர்கள் சிலர் தான். 
 
கரவெட்டிப் பிரதேச சபையில் ‘இன்னார் தான் வரமுடியும், இன்னார் வர முடியாதே’ என்று வாதத்தை வைக்கிறார்கள். இருந்து விட்டுப்போகட்டும்.    
 
அம்மன் கோவில் நிர்வாகத்தை இன்னார் தான் நடத்த வேண்டும் என்ற எழுதாத சட்டம் இருந்தது. மாறவில்லையா?
 
அதுபோல் தான் வல்வை நகரசபை உறுப்பினர் எவர் என்றாலும் வல்வை நகரசபைத் தவிசாளர் பதவிக்கு தகுதியானவர் என்றாலும் யாராகவும் இருந்துவிட்டு போகட்டும். அதுதான் உண்மையான தலைவரின் தமிழ் தேசியம். சிலருக்கு இது கசப்பாகத் தான் இருக்கும். 
 
கடந்த நகரசபைத் தேர்தலில் கூட்டமைப்பு வென்ற போது, சிவாஜி அண்ணா, திரு.சிவா அல்லது சதீசைத்தான் தலைவர் பதவிக்கு நியமிப்பார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனாலும் யாருமே எதிர்பாராத வண்ணம் ‘ஜெயலலிதா அம்மையார் பன்னீர்செல்வத்தைப் நியமித்ததைப் போல்’ திரு.கருணாநந்தராசாவை நியமித்தார். 
 
சதீஸை சிவாஜி அண்ணா போடலாம் என்று நான் நம்பியதற்கு காரணம், சதீஷ் மிகவும் நெருக்கடியான காலங்களில் சிவாஜி அண்ணவோடு ஒன்றாக நின்றவர். 
 
கடந்த பல வருடங்கள் முன்பு, இக்காட்டான காலப்பகுதியில்  இருதயத்தில் சத்திரசிகிச்சை ஒன்றுக்காக கொழும்பு வந்து திரு.ஸ்ரீகாந்தா அவர்கள் வீட்டில் தங்கியிருந்த போது போய் சந்தித்தேன் அப்பொழுதும் சிவாஜி அண்ணாவுக்கு உதவியாக இருந்தவர் சதீஷ் தான். இவ்வாறு பல விடயங்களை கூறலாம்.
 
சதீசுக்கு போதாத காலம் நேற்றும் பிசகி விட்டது. தீருவிலில் உணர்ச்சி வசப்பட்டு சொத்தையில் கை வைத்ததும், பிரமுகரின் கொடும்பாவியை எரித்ததும் இம்முறை வினையாக முடிந்துவிட்டது. 
 
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிந்ததிலிருந்து சதீஷ் கூட்டமைப்புக்கு எதிரான நிலப்பாட்டையே எடுத்து வந்துள்ளார். நேற்றைய தெரிவில் கூட சதீஷ் கூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்தக் கூடும். அதாவது சுயேட்ச்சையின் வெற்றி உறுதிப்படுத்தப் பட்ட ஒன்று என்ற நிலையில்,  கூட்டமைப்பு (சிவாஜி அண்ணா) சதீசை தவிசாளர் நியாமனத்துக்கு நியமித்தது. சதீஸ் கட்சிக்கு எதிராக செயற்பட்டவர், ஆகவே அவருக்கு எப்படி பதவி கொடுக்க முடியும் என ஞானேந்திரன் அதிருப்தி. சதீசுக்கு கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுக்காமல் காட்சி (காட்சி) மாறுவதை தவிர்க்க இப்பொழுது பதவி.
 
மொத்தத்தில் சிவாஜி அண்ணா, சதீஸ், ஞானேந்திரன் ஆகிய மூவரில் சரி, பிழை என்று ஒன்றுமில்லை. பக்கா அரசியல் தான். வேறு ஒன்றுமில்லை. குறிப்பாக சதீசும், ஞானேந்திரனும் அரசியலில் ஒரு படி மேலேயே போய் விட்டார்கள்.
 
சரி செல்வேந்திரா அவர்களின் விடயத்துக்கு வருகின்றேன்.
 
“மீண்டும் படித்த ஒருவர் தவிசாளராக ஆக்கப்பட்டுள்ளார்” என்கிறார்கள் சிலர். இக்கூற்றுக்கு என்னால் உடன்படமுடியாது. 
 
‘தமிழகத்தில் காமராஜர் போல் சிறந்தவொரு ஆட்சியைக் கொடுத்த முதல்வர் இல்லை’ என பல முறை பலர் கூறியுள்ளார்கள். நான் ஒரு முறை மதுரையில் இருந்த போது, மதுரையைச் சுற்றிக் காட்டிய எனது நண்பனின் தந்தை “இது காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அணை” என்று ஒன்றைக் காட்டினார். 
 
படித்த அரச அதிகாரிகளுடன் வலம் வரும் காமராஜர், இரண்டு மலைகளைப் பார்த்து ‘இந்த இடத்தில் ஒரு அணை கட்டுங்கள்’ என்பாராம். தமிழகத்தில் கட்டப்பட்ட பல ஆணைகள் காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது தானாம். 
 
ஏன் 30 வருட போராட்ட காலத்தில் படிக்காத எத்தனை பேர் எவ்வாறு எல்லாம் சாத்தித்து காட்டினார்கள். 
 
அதற்காக படிக்காத ஒருவர் தான் நகரசபைத் தலைவராக வர வேண்டும் என்று நான் கூறவறவில்லை. 
 
இதுவரை எத்தனையோ படித்த நகரபிதாக்கள் வல்வையை ஆண்டு விட்டார்கள். வல்வையில் கண்ணுக்குத் தெரியும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தவர் இவர்களில் எவர்?
 
திரு.சிவா, சதீஷ் மற்றும் ஞானேந்திரன் போலவே, இன்னொரு தடத்தில் நகரசபை தலைவர் என்னும் ஓட்டப் பந்தயத்தில் போட்டியிட்டவர் தான் திரு.செல்வேந்திரா அவர்கள். 
 
கடந்த உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் ‘தான் தேர்தலில் போட்டியிடப் போவதாக’ செல்வேந்திரா அங்கிள் என்னிடம் கூறினார். அப்பொழுது அவரோடு கூட இருந்ததாக நான் கருதிய அவரின் ‘ஓரிரு சகாக்கள்’ வாசம் பற்றிய எனது நெருடலைத் தெரிவித்தேன். 
 
அப்பொழுது அவருடன் கூட வந்திருந்த தம்பி, ‘சிவாஜி அண்ணாவோடும் சேர்ந்து ஊர் முன்னேற்றத்துக்கு ஒன்றாக நாங்கள் எல்லோரும் செயற்பட வேண்டும், சிவாஜி அண்ணாவோடு கதைத்துப் பாருங்கள்’ என்றார். (ஆனாலும் செல்வேந்திரா அங்கிள் தான் கட்சி சாராமல் தனித்துப் போட்டியிடவே விரும்புவதாக கூறினார்).
 
பின்னர் சிவாஜி அண்ணாவோடு கதைத்தபோது, தனது பக்கத்தில் தவிசாளருக்கான ஒருவரை கூறினார். ‘அவர் சரிப்படமாட்டார்’ என்று கூறி ‘ஏன் செல்வேந்திரா அங்கிளை உள்வாங்கி, அவரை தவிசாளராக முன் நிறுத்தக் கூடாது’ என்றேன். அதற்கு சிவாஜி அண்ணாவும் ‘திரு..செல்வேந்திரா பிரச்சனை இல்லை, ஆனால் அவரின் பின்னணி தான் பிரச்சனை’ என்றார்.
 
இந்தக் கூற்றை செல்வேந்திரா அங்கிளும்  ஏற்றுக் கொண்டார். அதாவது ‘தான் கதைக்கும் இடத்தில் எல்லாம் தன்னை இன்னார் தான் இயங்குகின்றார்கள் என்றும் அந்த வழியில் போனால் வெற்றி பெறுவது கடினம் என்கிறார்கள்’ என்று கூறியிருந்தார்.. 
 
இந்த விடயத்தை அன்றே செல்வேந்திரா அங்கிள் கவனமாகக் கையாண்டு இருந்திருந்தால், 4 ற்குப் பதிலாக இன்னும் 2, 3 சீற்றுக்களை பெற்றிருந்திருப்பார். தவிசாளராகயிருக்கலாம். 
 
காரணம் இவருக்கு என்று வாக்கு வங்கியிருந்தது.  87 – 90 மிகவும் இக்கட்டான காலப் பகுதியில் வல்வை பிரஜைகள் குழுத் தலைவராக செயற்பட்டவர் செல்வேந்திரா அங்கிள். பிரஜைகள் குழுவின் உறுப்பினர் திரு சிவானந்தசுந்தரம் அவர்கள் வல்லை வெளியில் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், மரண பயம் பாராது தொடர்ந்து துணிச்சலாக நின்று செயற்பட்டவர். (இன்னும் எழுத இடமுண்டு. நேர காலம் வரும் போது எழுதுகின்றேன்). 
 
நான் ஊருக்குப் போகும் போதும் தவறாமல் சந்திக்கும் நபர்களில் ஒருவர் இவர். ‘வல்வை நகரசபை டெவலப்மெண்ட்’ என்று மட்டும் தான் கதைப்பார். அதுவும் சாத்தியமானவற்றை.  கல்வி அறிவு உள்ளவர் 
 
தவிசாளர் பதவி என்பது செல்வேந்திரா அங்கிள் கூறுவது போல் ‘டெவலப்மெண்ட்’ என்பதை பிரதானமாகக் கொண்டமைந்தது தான். இதற்கு மத்திய அரசிடமும் வாங்கிறதை வாங்கி செய்வதை செய்து விட வேண்டும்.
 
இதற்கு தலைநகரிலும் பரிச்சயமான ஒருவர் - டிபார்ட்மெண்ட் மற்றும் மின்ஸ்ற்றிக்கு போய் காரியம் சாதிக்கக் கூடிய ஒருவராக இருந்தால் சிறப்பு. 
 
தவிசாளர் என்றால் நகரசபையின் நீர், நிலை, குப்பை, கால்வாய், சேறு, மரம், சந்தை, பூங்கா, வெள்ளம், மூன்றாம் நபர்களுடன் தொடர்பாடல், அரவைணைத்து செல்லல், தரவுகள், உதவிகள் பெறல், திட்டமிடல்..............  என மிகவும் பரந்துபட்ட ஒரு அறிவு, நகர்வு வேண்டும். (சந்தியில் குந்தி இருப்பதும் அல்லது வெறும் கணனி அறிக்கைக்கள் விடுவதல்ல). 
 
இதற்குப் பொருத்தமானவர் இப்போதைக்கு செல்வேதிரா அங்கிள் என்பது எனது எண்ணம்.
 
‘தீருவில் பூங்காவிற்கு முதலில் சுற்றிவர ஒரு வேலியைப் போடுங்கள்’ என்றார். யதார்த்தமான சிந்தனை. வேலியைப் போடாமல் சில லட்சத்துக்கு மரத்தை நட்டார்கள். வெட்டிய குழி கூட மறைந்துவிட்டது.
 
மிகவும் சிக்கலான நிலப் பரப்பைக் கொண்ட யாழ் தீபகற்பத்துக்கு தேவையான ஒன்று கண்டல் மரங்கள். தொண்டைமானாறு நீரேரியில்  அவ்வாறு கண்டல் மரங்கள் வைக்க நிபுணர் ஒருவரை அழைத்து கதைத்திருந்தார். இவை அவர் பற்றி கூறக் கூடிய சில உதாரணங்கள். 
 
தொண்டைமானாறு நீரேரியில் வண்டல்
தாவரங்கள் நடுக்கை பற்றிய ஆய்வில் 
 
 
ஊர் அபிவிருத்தி சம்பந்தமான ஏராளமான தரவுகளை வைத்துள்ளார்.
 
கதைக்கும் பொழுது, ‘சிவாஜி என்றாலும் சரி கருணாநந்தராசா என்றாலும் சரி ஊருக்கு ஏதாவது செய்தால் சரி’ என்னும் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவார். 
 
வெள்ளம் வரும் தீருவில் தூபி பகுதியில், நடைபாதை ஒன்றை அமைக்க - அது வெள்ளத்தில் எவ்வாறு அமையப் போகின்றது என அறிய - வெளிநாட்டில் உள்ள தனது தெரிந்த கல்விமான் ஒருவர் மூலம் தீருவில் பூங்காவின் நிலமட்டம் தொடர்பான அரிய தரவுகளைப் பெற்றார். 
 
மொழிகளில் பரிச்சயம் உள்ளவர். 
 
காலம் காலமாக ஸ்ரீதரன் எம் பியும் கத்திக்கொண்டுதான் இருக்கிறார், அதுவும் பாராளுமன்றில். சிறீதரன் எம்பியின் படத்தை காட்டி இவர் யார் என்று சிங்களவரிடம் கேட்டால் ‘தெரியாது’ என்பார்கள். ஆனால் நேற்று வந்த சாணக்கியன் யார் என்றால் (படத்தைக் காட்டாமல்) சிங்களவருக்கு தெரிகிறது. காரணம் மும் மொழி பேச்சு.
 
நகரசபை தலைவருக்கு 3 மொழி தெரியாவிட்டாலும் 2 மொழிகளாவது தெரிந்து இருக்கவேண்டும். மூன்றும் தெரிந்தால் சிறப்பு. 
 
ஆனந்தன் நினைவு நீச்சல் தடாக திறப்புவிழாவில், திரு.கருணாநந்தராசா அவர்கள் உரையாற்ற (மங்களவிடம் சில வேண்டுகோள்கள் விடுத்துக் கொண்டிருக்க) திரு.தர்மரத்தினம் அவர்கள் தனக்கு விளங்கிய தமிழில் அதை மொழி பெயர்த்துக் கொண்டிருக்க - மங்களவும் சுமந்திரனும் தங்களுக்குள் ஏதோ கதைத்துக் கொண்டிருந்தார்கள்.  
 
‘அரசியல் என்றால் இறங்கி வேலை செய்ய வேண்டும். செல்வேந்திராவுக்கு அது தெரியாது’ என்று சக சபை உறுப்பினர் ஒருவர் என்னிடம் அண்மையில் குறிப்பிட்டார். உண்மைதான் அரசியல் தெரிந்து இருந்தால் இவர் எப்பொழுதே நகர சபைத் தலைவர் என்ன அதற்கு மேலும் போயிருக்லாம். 
 
அவருக்கு அரசியல் தெரியாது என்றும் ஒதுக்கி விடமுடியாது. கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தமிழர் எதிர்க் கட்சிகளின் ஒரு முக்கிய கூட்டம் இவரின் வீட்டில் தான் இடம்பெற்றது. 
 
பிரிட்டிஷ்காரர் தான் 48 இல் நாட்டை விட்டு போகும் போது தமிழர்களுக்கு பிரச்சனை வரும் வகையில் சென்றுள்ளார்கள் எனக் கூறி, ஒரு புத்தகம் எழுதி பிரிட்டிஷ் பிரதமருக்கு அனுப்பியிருந்தார். 
 
நான் கொழும்பில் நிற்கின்ற பொழுதெல்லாம் நாரா மற்றும் கடற்தொழில் அமைச்சுக்கு போவதற்கு என்னையும் அழைத்தார். சில தடவைகள் கூடவே சென்றுள்ளேன். 
 
அவ்வாறு ஒரு முறை ஆதிகோவில் பகுதியில் அமையவிருந்த நங்கூர தளம் பற்றிக் கதைக்க மாளிகாவத்தையில் தலமை அலுவலகத்துக்குப்  போனோம். 
 
விடயம் முடிந்த பின்பு, ப்ராஜக்ட் டைரக்டர் ‘மிஸ்டர் செல்வேந்திரா, நாங்கள் சில பண உதவிகள் செய்கின்றோம், உங்கள் நகரசபை சார்பில் கரையோரம் சம்பந்தமாக சில திட்டங்களை கொடுக்க முடியுமா’ என்றார். ‘இன்னும் சில நாட்களில் தந்தால் தான் சாத்தியம், ஏனெனில் குறித்த பண உதவி இந்த வருட கணக்கில் சேர்க்கப்படவேண்டும்’ என்றார். 
 
நாங்கள் ஏதோ 1, 2 மில்லியன் தான் என்று யோசித்து எங்களுக்குள் கதைத்துவிட்டு, ‘எவ்வளவு தருவீர்கள்’ என்று கேளுங்கள் என்றேன். அப்படி அவர் கேட்க ‘சுமார் 20 மில்லியன்கள்’ என்றார் ப்ராஜக்ட் டைரக்டர்..
 
உடனே செல்வேந்திரா அங்கிள் நகரசபைத் தலைவரையும் செயலாளரையும் தொடர்பு கொண்டு விடயத்தைக் கூறி சில திட்டங்கள் பற்றி ‘உடனடியாக தரவு தாருங்கள்’ என்றார். (சிங்களவரையோ, திணைக்களங்களையோ தூக்கிப் பிடிக்கவில்லை. ஆதிகோவில் பற்றி அங்குள்ள மலசல கூட வசதியிலிருந்து அனைத்தையும் அச்சொட்டாக தெரிந்து வைத்துள்ளார் ப்ராஜக்ட் டைரக்டர்). 
 
வருத்தம் – அவர்கள் பதிலே அளிக்கவில்லை. உடனடியாக நான் எனக்குத் தெரிந்த சில திட்டங்களைக் கூற செல்வேந்திரா அங்கிளும் சில திட்டங்களை போட்டு அவர்களிடம் கொடுத்தார். 
 
பின்பு ஊருக்கு சென்று இது பற்றி,  நகரசபைத் தலைவர் மற்றும் செயலாளர் இருவரிடமும் கதைத்த பொழுதும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லையாம்.  
 
கொழும்பில் இருந்த திணைக்களகாரர் பச்சைக் கொடி காட்டி மேலதிக தகவல்களுக்கு வற்புறுத்த, சில தரவுகளைப் தனது முயற்சியால் பெற்று அவர்களுக்கு  அனுப்பினார். 
 
அவ்வாறு அனுப்பும் போது, ‘இந்த விடயம் தொடர்பாக கொழும்பில் கதைத்த பொழுது  ஆதவன் தன்னுடன் இருந்ததாலும், சில திட்டங்கள் பற்றி தனக்கு தெரிவித்தாலும், அவருக்கும் ஒரு கொப்பி அனுப்புவோம் என்றார். அதற்கு நகரசபை தவிசாளரும் இன்னொமொரு உறுப்பினரும் ‘அவருக்கும் நகரசபைக்கும் என்ன சம்பந்தம் என்றார்களாம்.
 
புதிய நகரசபை தெரிவாகி முதல் நடந்த 2,3 கூட்டங்களில் எதிர்க் கட்சியிலிருந்து திரு.கருணாநந்தராசா அவர்களுக்கு கடும் எதிர்ப்பு. அப்பொழுது ஊரில் தான் நின்றேன். (நகரசபை மண்டபம் எமது அறையிலிருந்து வெறும் 6 மீட்டர் தூரத்தில் தான் உண்டு. ஆகவே அங்கு நடைபெறும் சகலத்தையும்  கேட்கக் கூடிய வசதி).
 
அப்போது திரு.கருணாநந்தராசாவும், தற்போதும் உறுப்பினராக இருப்பவர்களில் பிரதானமான இருவரும் என்னிடம் வந்து, திரு.செல்வேந்திரவிடம் கதைத்து, ‘தமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு’ கேட்கக் கூறினார்கள். அப்பொழுது நான் திரு.கருணாநந்தராசாவிடம் நீங்கள் சபையில் தவிர்க்க வேண்டிய சில விடயங்கள் என்று சிலவற்றை எடுத்து சுட்டிக் காட்டினேன். குறிப்பிடக்கூடிய நேரம் கதைத்த பின்னர், வீட்டை விட்டுப் போகும் போது ‘நிறைய விடயங்கள் கூறினீர்கள் தம்பி, நன்றி’ என்றிருந்தார். 
 
செல்வேந்திரா அங்கிளிடம் விடயத்தைக் கூறினேன். ‘நல்லது நல்லது நான் முடிந்த வரை பார்த்துக் கொள்கின்றேன்’ என்றார். 
 
தற்பொழுது சிவாஜி அண்ணா செல்வேந்திரா அவர்களின் தெரிவையிட்டு ‘தமிழ் தேசியம் செத்து விட்டது’ என்கிறார். 
 
தமிழ் தேசியம் அது 2009 ஆம் ஆண்டு உடனேயே செத்து விட்டது. 
 
யார் சிவாஜி அண்ணாவை எவ்வாறு விமர்சித்தாலும் வல்வைக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இவரின் சேவை தேவை என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான். 
 
அதற்காக சிவாஜி அண்ணாவின் இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது . 
 
தீருவிலில் தூபி அமைக்க முன்னெடுக்கப்பட்ட விடயத்தில் யார் எந்த எந்த பக்கம் நின்றார்கள் என்று பார்த்தாலும், மற்றும் வரவு செலவு திட்டத்தில் ஈ. பி. டி. பி உதவியுடன் வென்றமை அன்றும் அவரின் கூற்றுப்படி தமிழ் தேசியம் செத்து இருந்தது என்று தான் கூற வேண்டும். தூபி விடயத்தில் ஈ பி டி பி, அங்கயன் உறுப்பினர்கள் யாருக்கு ஆதரவு அளித்தார்கள்?
 
அன்று பொதுத் தூபி அமைக்கக்கூடாது என்று சைக்கிள் கூட்டமைப்புக்கு எதிராக சைக்கிள் ஒட்டியவர்கள், நேற்று கூட்டமைப்புடன் சேர்ந்து சைக்கிள் ஓடினார்கள். 
 
ஆகவே கவுண்டமணி கூறுவதைப் போல் ‘அரசியலில் இதெல்லாம் சகஜம் அப்பா’ என்று கூறிக் கொண்டு அடுத்தக் கட்டத்துக்கு போய் விட வேண்டும்.  
 
வல்வை நகரசபை என்பது ஏனைய சபைகள் போல் அன்றி மிகவும் வருமானம் குறைந்த சபை. ஆகவே பெருமளவிலான நிதிகளை,  திட்டங்களை அரச திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்கள் ஊடாகவே பெற்றுக் கொள்ள வேண்டும். சிங்கள திணைக்களம் / அமைச்சு என்று பார்க்கக் கூடாது. ஏனெனில் நாங்களும் வரிப்பணம் கட்டுகின்றோம். நாம் இவற்றில் ஒரு பங்கையாவது பெறாவிட்டால் எமது வரிப்பணம் இதர பகுதிகளுக்குத்தான் செல்லும். 
 
இதனை கருத்திற்கொண்டு, நானும் தம்பி அருள் குமரனும் கொழும்பில்  வல்வை மக்கள் மன்றம் என்ற ஒன்றை அமைப்போம் என்று இறங்கினோம். 
வல்வை மக்கள் மன்றம் அமைக்க கொழும்பில்
இடம்பெற்ற கலந்துரையாடல் 
 
இதன் பிரதான நோக்கமே கொழும்பில் உள்ள நம்மவர்கள் தேவயான திணைக்களம் / அமைச்சினை அணுகி ஊருக்கு திட்டங்களைப் பெற்று கொடுத்தல் ஆகும். இந்த முயற்சிக்கு நாங்கள் அழைத்த போது, ஓரிருவரை  தவிர ஏனையவர்கள் முன்வந்தார்கள். கிட்டத்தட்ட உருப்பெறும் நேரம் எங்கள் இருவராலும் தொடர முடியாத சூழ்நிலை, ஆட்சி மாற்றம் பின்னர் கொரொனா என்று அந்த முயற்சி கைகூடாமல் போய்விட்டது.
 
2009 இலிருந்து இன்று வரை நான் எதிர்பார்த்த குறிப்பிடக்கூடிய மாற்றங்களை வல்வை நகரசபையின் திட்டங்களில் பார்க்கவில்லை.  காரணம் தகுந்த தவிசாளர் அமையாத பிரதான காரணம். விட்டதையும் பிடிக்க வேகமாக ஓட வேண்டியுள்ளது. ஆகவே இருப்பவர்களுக்குள்  சிறந்தவர் தெரிவு என்றால் திரு. செல்வேந்திரா தான் 
 
அண்மையில் ‘நீங்கள் தான் வெற்றிடத்துக்கு சரியான ஆள்’ என்று கூறினேன்.  இல்லை ‘நாலு பேரை வைத்து நான் ஆட்சி செய்ய விரும்பவில்லை. யார் என்றாலும் - தனது திட்டங்களை ஆதரித்து அதற்கு உருக்கொடுத்தால் போதும்’ என்றார். 
 
எவர் பற்றியும் முதுக்குக் பின்னால் கதைக்காத தன்மை. எவரையும் பன்மை போட்டுக் கதைப்பவர். 84 வயதிலும் கார் ஓட்டுகின்றார். இவரின் கேட்கும் திறன், வயது வந்தும் ஞாபக சக்தி போன்றவை எனக்கு இன்றும் இவரைப் பார்க்கும் போது ஆச்சரியமளிக்கும் விடயங்கள்.  
 
செல்வேந்திரா அங்கிள் இருப்பவர்களில் மிகச் சரியான தெரிவு. இதை உணர்ந்து எதிர்க் கட்சியினர் இவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவ்வாறு அவர்கள் தவறும் பட்சத்தில், அடுத்து வரும் உள்ளூராட்சி தேர்தலிலும் தவிசாளராக திரு.செல்வேந்திரா அவர்கள் மீண்டும் ஜெயிப்பார்.
 
இவரின் மென்மையான சுபாவம் தற்போது இவருக்கு பலவீனம். ஆனாலும் இதையும் எதிர்க்கட்சிகாரர் தவறுதலாகக் கையாண்டால் அடுத்த உள்ளூராட்சி தேர்தலுக்கு அந்த தவறும் இவரின் வெற்றிக்கு வழி வகுக்கும். 
 

கப்டன் அதிரூபசிங்கம் ஆதவன்

TP – 00 94 777 64 99 55 (Viber,Whatsapp)

Email - marinerathava@yahoo.com

Face book – athiroobasingam.athavan

 


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
இ .சோதிவேல் (srilaanka) Posted Date: December 03, 2021 at 10:52 
வரும் காலத்தில் ஊர் மக்கள் எல்லோரும் செல்வேந்திரவுக்கு ஆதரவான தகுதியான பலரை இணைத்து ஒரு நல்ல குழுவை வெற்றிபெற செய்ய வேண்டும்.

Elayathamby Thevaguru (Canada) Posted Date: October 18, 2021 at 01:05 
நடுநிலையாக நின்று தெளிவாக உண்மையை எழுதியதற்கு எனது பாராட்டுக்கள்.

ராஜ்குமார் ஆறுமுகம் (கனடா) (Canada) Posted Date: September 24, 2021 at 19:56 
ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துகளைக்கொண்ட பதிவு.

நான் அறிந்த காலத்தில் நல்லவர் ஒருவர் நகரசபைத் தலைவராக வல்வைக்குத் தெரிவாகியுள்ளார்.
வாழ்த்துகள்.


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
தங்கனின் தாயார் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2024 (வியாழக்கிழமை)
புவியியலாளருக்கு உதவும் உராங்குட்டான்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2024 (வியாழக்கிழமை)
கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2024 (புதன்கிழமை)
Green layer இன் மரம் வளர்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
குறுத்திரைப்படம் - சம்மட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
தனக்கு சுயமருத்துவம் செய்த குரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
உடுப்பிட்டி மதுபானசாலை விவகாரம் - நீதிமன்றத்தை நாடிய சமூக அமைப்புக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
சோதியாவின் தாயார் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
விளம்பரம் - வீடு விற்பனைக்கு (வல்வெட்டித்துறை)
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
சின்ன கடற்கரையோரம் சுத்திகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
சோதிசிவம் நினைவாக துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற சிலம்பாட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
ஆதிவைரவ சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2024 (சனிக்கிழமை)
காண்டாவனம் (அக்னி நட்சத்திரம்) இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2024 (சனிக்கிழமை)
சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2024 (வெள்ளிக்கிழமை)
நாகபட்டினம் காங்கேசந்துறை பயணிகள் கப்பல் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2024 (வெள்ளிக்கிழமை)
துள்ளுகுடியிருப்பு ரோமன் க. த. க பாடசாலைக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2024 (வியாழக்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - ஐயாத்துரை பத்மநாதன் (அப்பர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA தை மாத கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - சண்முகசுந்தரம் அழகேந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - சிவசுப்பிரமணியம் பங்கைற்செல்வம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2024 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - கமலலோசனா பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - பரமானந்தவேல் தனலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
தேரேறி வருகின்றாள் எங்கள் தேசமன்னன் வளவுக்காரி.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2024 (திங்கட்கிழமை)
இன்றைய நாளில் - இலங்கையின் மிகப்பெரிய செல்வச்சந்நிதி தேர் எரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2024 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல் - சூசைப்பிள்ளை பெஞ்சமின் அருமைநாயகம் (பொறியியலாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2024 (புதன்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8910
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai